Business

கோவையில் விமான இன்ஜின் தயாரிக்க பரிசீலியுங்கள்: மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை செயலரிடம் முறையீடு

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மையத்தை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, ‘கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தில், தொழில்துறை சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

கலந்துரையாடலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) சந்திக்கும் பிரச்சனைகள், மத்திய – மாநில அரசுகள் செய்ய வேண்டிய சலுகைகள், உதவிகள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் எதிர்பார்க்கப்படும் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

கொடிசியா கோரிய முக்கிய கோரிக்கைகள்:

  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை (எம்.எஸ்.எம்.இ.,) முன்னுரிமை பிரிவாக கருத வேண்டும்.
  • பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளுக்கு எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் இருந்து 25% கட்டாய கொள்முதலை 40% ஆக உயர்த்த வேண்டும்.
  • தேவையான திறன்களுடன் மனித வளம் உருவாக்க நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும்.
  • கோவையில் விமான இன்ஜின்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
  • இயந்திரங்கள் வாங்க குறைந்த வட்டியில் வங்கி கடன் வழங்க வேண்டும்.
  • நிறுவன விரிவாக்கம், நவீனமயமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மூலதன மானியம் வழங்க வேண்டும்.
  • சென்னை, கோவை, சேலம், திருச்சி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து உதிரிபாகங்கள் மற்றும் பிற சேவைகளை பெறுவதை ஊக்குவிக்க தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்தை மேம்படுத்த வேண்டும்.
  • மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
  • அனைத்து மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்க வேண்டும்.
  • எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு உதவும் வகையில், உள்நாட்டு விநியோகம் மற்றும் விலைகள் சீராகும் வரை அனைத்து மூலப்பொருட்களின் ஏற்றுமதியையும் நிறுத்த வேண்டும்.
  • மூலப்பொருட்களுக்கு அரசே எம்.ஆர்.பி., விலை நிர்ணயிக்க வேண்டும்.
  • அனைத்து மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும்.
  • மூலப்பொருட்களுக்கு பதிலாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
  • மூலப்பொருட்களை ஆய்வு செய்ய மாநில அரசு குழு அமைக்க வேண்டும்.
  • பொதுத்துறை நிறுவனங்களின் ஆர்டர்களை ஓரிரு ஆண்டுகளுக்கு ஏற்பதால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது.
  • ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகள் எம்.எஸ்.எம்.இ., துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button