Education
With Product You Purchase
பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “புதிய கல்விக் கொள்கையின் சில முக்கிய திட்டங்களை நாங்கள் முன்னரே நடைமுறைப்படுத்தியுள்ளோம். அண்ணா காலத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டிருக்கும் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது,” என குறிப்பிட்டார்.
மேலும், ஐடிஐ படிப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் சேர்க்கை தேதியை நீட்டித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.