Travel
இன்று முதல் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர வேண்டாம் – கலெக்டர் அருணா
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மே 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அருணா, ஆரஞ்சு அலர்ட் போடப்பட்டிருந்தாலும், முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மே 18 முதல் 20-ஆம் தேதி வரை சுற்றுலாத் தேவைக்காக மக்கள் ஊட்டிக்கு வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.