கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இரண்டாவது நாளில் வெற்றி பெற்ற அணிகள்
கோவை : கோவை மாநகராட்சி வி.ஓ.சி., பகுதியில் அமைந்துள்ள உள்ளக கூடைப்பந்து அரங்கில், ஆண்களுக்கான 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 21வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை போட்டி நேற்று துவங்கியது.
இம்மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற எட்டு ஆண்கள் அணிகளும், எட்டு பெண்கள் அணிகளும் பங்கேற்கின்றன. போட்டிகளை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இரண்டாவது நாளில், முதல் ஆட்டத்தில் பெங்களூரின் பேங்க் ஆப் பரோடா அணி, சென்னையின் லயோலா அணியை எதிர்கொண்டது. 80-70 என்ற புள்ளிக்கணக்கில் பேங்க் ஆப் பரோடா அணி வெற்றி பெற்றது.
லக்னோ உத்தரபிரதேச போலீஸ் அணிக்கும், சென்னை இந்தியன் வங்கி அணிக்கும் இடையே நடந்த போட்டியில், இந்தியன் வங்கி அணி 82-73 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
திருவனந்தபுரத்தின் கேரள மாநில மின்சார வாரிய அணி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை எதிர்த்து விளையாடி 96-67 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் டிராபிக்கான மகளிர் பிரிவின் முதல் ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை எதிர்த்து விளையாடியது. இதில் தென் மத்திய ரயில்வே அணி 107-57 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னையின் தெற்கு ரயில்வே அணி, கொல்கத்தாவின் கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து 80-71 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
மும்பையின் சென்ட்ரல் ரயில்வே அணி, சென்னையின் ரைசிங் ஸ்டார் அணியை எதிர்கொண்டு 78-62 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
மும்பை மேற்கு ரயில்வே அணி, கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து விளையாடி 83-45 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.